- மீன்சுருட்டி அருகே வாகன விபத்தில் வாலிபர் பலியானார்
- உடலை கைப்பற்றி போலீசார் விசாரணை
ஜெயங்கொண்டம்,
அரியலூர் மாவட்டம் மீன்சுருட்டி அருகே சிதம்பரம் நேரு நகரைச் சேர்ந்தவர் அண்ணாமலை மகன் வினோத்குமார் (வயது24). இவர் கும்பகோணம் தேசிய நெடுஞ்சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். சோழதரம் கோவிந்தநல்லூர் பகுதியை சேர்ந்த சுரேஷ்குமார் (41) மற்றும் அவருடன் சேர்ந்த இருவர் பாப்பாக்குடி வருவதற்காக சென்னை-கும்பகோணம் தேசிய நெடுஞ்சாலையில் வந்து கொண்டிருந்தனர். அப்போது சர்வீஸ் சாலையில் இருந்து திடீரென தேசிய நெடுஞ்சாலையின் குறுக்கே வினோத் குமார் என்பவர் வந்ததால் விபத்து ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே சுரேஷ் குமார் பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் அவருடன் வந்த இருவருக்கும் பலத்த காயம் ஏற்பட்டு காட்டுமன்னார்கோவில் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இதையடுத்து சுரேஷ்குமார் உடலை ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. மேலும் இதுகுறித்து மீன்சுருட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.