அ.தி.மு.க. சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு
- கீழப்பலூர் பேருந்து நிலையத்தில் தண்ணீர் பந்தல் திறக்கப்பட்டது
- பொதுமக்களுக்கு பழங்கள் விநியோகம்
திருமானூர்.
அரியலூர் மாவட்டம் திருமானூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட கீழப்பலூர் பழைய பேருந்து நிலையத்தில் அ.தி.மு.க. மாவட்ட செயலாளரும் முன்னாள் தலைமை அரசு கொறடாவுமான தாமரை ராஜேந்திரன், தண்ணீர் பந்தலை திறந்து வைத்து பொதுமக்களுக்கு நீர் மோர் மற்றும் பழங்களை வழங்கினார்.இந் நிகழ்ச்சியில் மேற்கு ஒன்றிய செயலாளர் பளிகாநத்தம் ஊராட்சி மன்ற தலைவர் சாமிநாதன் மற்றும் கிழக்கு ஒன்றிய செயலாளர் வடிவழகன் முன்னிலை வகித்தனர்.நிகழ்ச்சியில் அக்பர் ஷரீஃப், தனசெல்வி சக்திவேல், தனலட்சுமி மருதமுத்து, கமலக்கண்ணன், மலர்விழி நல்லதம்பி, சேட் ராஜேந்திரன், தவமணி, செந்தில்குமார், மலர்விழி நல்ல தம்பி, பாவேந்தன், இளையராஜா, மணிவேல், சித்ரா உதயகுமார், அய்யாக்கண்ணு, இலந்தை தேவர், தில்லை திருவாசகம் மணி, சரவணன், முருகேசன், சௌந்தர், சபரிநாதன், மாரியப்பன், மற்றும் அ.தி.மு.க. நிர்வாகிகள், பொறுப்பாளர்கள் தொடர்கள் கலந்து கொண்டனர்.