உள்ளூர் செய்திகள்

திருமானூரில் தொடக்கக்கல்வி துறையில் விருது-ஓய்வு பெற்ற ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா

Published On 2023-04-28 05:43 GMT   |   Update On 2023-04-28 05:43 GMT
  • திருமானூரில் தொடக்கக்கல்வி துறையில் விருது-ஓய்வு பெற்ற ஆசிரியர்களுக்கு பாராட்டுவிழா நடைபெற்றது
  • நிகழ்ச்சிக்கு வட்டார கல்வி அலுவலர் பி.பரிமளம் தலைமை தாங்கினார்

திருமானூர்:

அரியலூர் மாவட்டம் திருமானூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட பள்ளிக்கல்வி துறையில் டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது பெற்றும் மற்றும் ஓய்வு பெற்ற ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா வட்டார கல்வி அலுவலகத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு வட்டார கல்வி அலுவலர் பி.பரிமளம் தலைமை தாங்கினார். எஸ்.எஸ்.ஏ. மேற்பார்வையாளர் பெ.ஜெயபாரதி முன்னிலை வகித்தார். தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள் மற்றும் அலுவலர்கள் பணி ஓய்வு பெற்ற ஆசிரியர்கள் மற்றும் டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது பெற்ற ஆசிரியர் என அனைவரையும் பாராட்டி நினைவு பரிசு வழங்கி வாழ்த்தினர்.

Tags:    

Similar News