உள்ளூர் செய்திகள் (District)

சாணை பிடிக்க வந்து சைக்கிளை திருடிச்சென்ற பலே கொள்ளையன்

Published On 2023-04-04 09:12 GMT   |   Update On 2023-04-04 09:12 GMT
  • செந்துறை ஊராட்சி மன்ற தலைவர் வீட்டில் துணிகரம்
  • சி.சி.டி.வி. காட்சிகளை கொண்டு போலீசார் விசாரணை

செந்துறை,

அரியலூர் மாவட்டம் செந்துறை தாலுகா அலு–வலகம் எதிரே வசிப்பவர் செல்லம் கடம்பன். இவர் செந்துறை ஊராட்சி மன்ற தலைவராக இருந்து வரு–கிறார். இவரது வீட்டுக்கு கத்தி, அரிவாள்மனை உள்ளிட்ட ஆயுதங்களை சாணை பிடிக்க வந்துள்ளார்.பின்னர் அவர் ஊராட்சி மன்ற தலைவரிடம் கத்தி மற்றும் வீட்டு உபயோக பொருட்களை சாணை பிடித்து விட்டு வீட்டை நோட்டமிட்டுள்ளார். வீட்டில் ஊராட்சி மன்ற தலைவரும் அவரது மகள் மட்டுமே இருப்பதை அறிந்த அந்த நபர் மீண்டும் மாலை நேரத்தில் வந்துள்ளார்.அப்போது வீட்டின் முன்பு நிறுத்தி வைந்திருந்த சைக்கிளை லாவகமாக திருடி சென்றார். இவை அனைத்தும் அங்கு பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி. கேமராவில் பதிவாகியுள்ளது. இதே போன்று அருகில் உள்ள கட்டிடத்தில் இருந்த மின் கேபிள்கள் மற்றும் எல்இடி விளக்கு போன்றவை கடந்த மாதம் திருடு போனது.மேலும் முன்னாள் பி.எஸ்.என்.எல். அதிகாரி வீட்டில் இதே போன்று பட்டப்பகலில் வீட்டின் பூட்டை உடைத்து அங்கு இருந்த ரூ.1 லட்சம் பணத்தை திருடி சென்றுள்ளனர். கடந்த வாரம் ஆதிகுடிக்காடு மற்றும் நந்தையன்குடிக்காடு கிராமங்களில் நள்ளிரவில் வீடு புகுந்து பெண்களிடம் 8 பவுன் தங்கச் சங்கிலியை பறித்து சென்றனர்.பகலில் பெண்கள் மட் டுமே தனியாக இருப்பதை அறிந்து இதுபோன்ற பகு–திகளை நோட்டமிட்டு அந்த மர்ம நபர் மற்ற இடங்க–ளிலும் கைவரிசை காட்டி உள்ளாரா என்பது குறித்து செந்துறை போலீசார் விசா–ரணை நடத்தி வருகின்றனர்.

செந்துறை பகுதியில் கடந்த சில நாட்களாக தொடர் திருட்டு சம்பவம் நடைபெறும் நிலையில் ஊராட்சி மன்ற தலைவர் வீட்டிலேயே பட்டப்பகலில் நடைபெற்ற இந்த துணி–கரமான திருட்டு சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்ப–டுத்தியுள்ளது.

Tags:    

Similar News