- ரத்த அழுத்தம், சர்க்கரை நோய் தொடர்பான விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
- திமுக முன்னோடிகளுக்கு புத்தாடைகளும் வழங்கப்பட்டது
அரியலூர்,
கங்கை கொண்ட சோழபுரம் ஊராட்சி அரசு மேல்நிலை பள்ளி வளாகத்தில், போக்குவரத்து துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர். அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு " மாபெரும் இரத்த தான முகாம்" மற்றும் " நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா" நடைபெற்றது.ஜெயங்கொண்டம் தெற்கு ஒன்றிய கழக செயலாளர் இரா. மணிமாறன், அவர்கள் தலைமையில் மாவட்ட கழக பிரதிநிதி எஸ்.கே.பி. சங்கரன், வரவேற்புரை ஆற்றனார்.தலைமை செயற்குழுஉறுப்பினர் எம். பி.பாலசுப்ரமணியன், முன்னிலையில் மாநில சட்ட திட்ட திருத்தகுழு இணை செயலாளர் சுபா.சந்திரசேகர்.நலத்திட்ட உதவிகள் வழங்கி சிறப்புரையாற்றினார்."இரத்த தான முகாம்" விழாவில் கழக முன்னோடிகளுக்கு புத்தாடை வழங்கி, மதிய உணவு வழங்கப்பட்டது. மேலும் அரியலூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனை மருத்துவ குழுவினர் கொண்டு பொது மக்களுக்கு இரத்த அழுத்தம், சர்க்கரை நோய் மற்றும் அனைத்து விதமான நோய்களுக்கும் சிகிச்சை மற்றும் ஆலோசனைகள் வழங்கப்பட்டது.முகாமில் பொதுக்குழு உறுப்பினர் சி.ஆர்.எம். பொய்யாமொழி. மாவட்ட பொருளாளர் கு. இராஜேந்திரன், பொதுக்குழு உறுப்பினர் வி.எம். ஷாஜகான் மற்றும் கழக முன்னோடிகள் கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்தனர். ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் வீர (சிவா) என்கிற சிவகுருநாதன், நன்றி உரை ஆற்றி விழாவினை நிறைவு செய்தார்.