உள்ளூர் செய்திகள்

வரும் 24-ந் தேதி 6-ம் ஆண்டு புத்தக திருவிழா

Published On 2022-06-21 09:13 GMT   |   Update On 2022-06-21 09:13 GMT
  • வரும் 24-ந் தேதி 6-ம் ஆண்டு புத்தக திருவிழா நடைபெற உள்ளது.
  • அமைச்சர்கள் பங்கேற்பு

அரியலூர் :

அரியலூர் அரசினர் மேல்நிலைப்பள்ளி விளையாட்டு மைதானத்தில் அரியலூர் மாவட்ட தமிழ் பண்பாட்டு பேரமைப்பு, தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கத்தினர், இணைந்து அரியலூர் மாவட்ட நிர்வாகத்தினர் உறுதுணையுடன் ஆறாம் ஆண்டு புத்தகத் திருவிழா 24 ஆம் தேதி தூங்குகிறது அடுத்த மாதம் 4-ஆம் தேதி வரை நடைபெறுகின்றது.

தமிழ் பண்பாட்டு பேரமைப்பு செயலாளர் நல்லப்பன் வரவேற்று பேசுகிறார், தமிழ்நாடு போக்குவரத்து துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர், தமிழ்நாடு அரசு பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கலந்துகொண்டு சிறப்புரையாற்ற உள்ளனர்,

மாவட்ட கலெக்டர் பெ.ரமண சரஸ்வதி, மாவட்ட போலீஸ் எஸ்பி பெரோஸ்கான் அப்துல்லா, அரியலூர் எம்எல்ஏ வக்கீல் கு.சின்னப்பா, ஜெயங்கொண்டம் எம்எல்ஏ க.சாெ.க.கண்ணன், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் இராமன், அண்ணாமலை பல்கலைக்கழக தமிழ்த்துறை பேராசிரியர் அரங்க. பாரி, நகராட்சி தலைவர் சாந்தி, தமிழ் பண்பாட்டு பேரமைப்பு தலைவர் பாலகிருஷ்ணன்,

செயலாளர் ராமசாமி, பொருளாளர் புகழேந்தி, புலவர் இளங்கோவன், செல்லபாண்டியன், தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கத் தலைவர் வைரவன், துணைத்தலைவர் மயில்வேலன், எம் ஆர் சி கல்வி நிறுவன தாளாளர் ரகுநாதன், ஆர்.டி.சி குழும தலைவர் அக்பர் ஷெரிப் உட்பட பலர் கலந்து கொள்கின்றனர், புத்தகத் திருவிழாவின் சிறப்பு ஏற்பாடுகளை தமிழ் பண்பாட்டு பேரமைப்பினர் செய்து வருகின்றனர்.

Tags:    

Similar News