உள்ளூர் செய்திகள் (District)

மாற்றுத்திறனாளிகளுக்கு அடையாள அட்டை வழங்கும் முகாம்

Published On 2022-09-08 07:14 GMT   |   Update On 2022-09-08 07:14 GMT
  • மாற்றுத்திறனாளிகளுக்கு அடையாள அட்டை வழங்கும் முகாம் நடந்தது.
  • பொய்யாதநல்லூர் அரசு பள்ளியில் நடந்தது

அரியலூர்:

மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மூலம் வழங்கப்படும் அடையாள அட்டை பெற்றவர்களுக்கு தமிழக அரசு பல்வேறு சலுகைகளை வழங்கி வருகிறது. மேலும் மத்திய அரசினால் மாற்றுத்திறனாளிகளுக்கு தனித்துவம் வாய்ந்த அடையாள அட்டை வழங்கப்பட்டு வருகிறது. மாவட்டத்தின் தொலை தூரங்களில் இருந்து அடையாள அட்டை பெற வரும் மாற்றுத்திறனாளிகளின் சிரமங்களை குறைக்கும் வகையில் அடையாள அட்டை வழங்க குறுவட்ட அளவில் 20 சிறப்பு முகாம்கள் நடத்த திட்டமிடப்பட்டு பொய்யாதநல்லூர் குறுவட்டத்திற்கு இன்று (வியாழக்கிழமை) பொய்யாதநல்லூர் அரசு உயர்நிலைப்பள்ளியில் நடந்தது.

Tags:    

Similar News