உள்ளூர் செய்திகள்

உலக பூமி தினம் முன்னிட்டு மரக்கன்று நடும்விழா

Published On 2023-04-24 06:58 GMT   |   Update On 2023-04-24 06:58 GMT
  • சிறுவளூர் அரசு உயர்நிலை பள்ளியில் நடைபெற்றது
  • பள்ளி மாணவ, மாணவிகள் சார்பில் மரக்கன்றுகள் நடப்பட்டது

அரியலூர், 

அரியலூர் அடுத்த சிறுவளூர் அரசு உயர்நிலைப் பள்ளியில் உலக பூமி தினம் கொண்டாடப்பட்டது. பள்ளி தலைமை ஆசிரியர் சின்னதுரை தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில், அவர் பேசும்போது, மனிதன் பேராசையால் பூமியின் இயற்கை வளம் அதிகமாக சுரண்டப்படுகிறது. உலகில் உயிர் வாழ சாதகமான சூழல் கொண்ட ஒரே கிரகம் பூமி மட்டுமே . ஆனால் சுற்று சூழல் நாளுக்கு நாள் மோசம் அடைந்து வருகிறது. பூமியை காக்க காடுகளின் பரப்பை அதிகரிக்க வேண்டும். மரங்கள் அதிகம் வளர்க்க வேண்டும் என்று அவர் பேசினார். இதனை தொடர்ந்து பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதற்கான ஏற்பாடுகளை ஆசிரியர்கள் தனலட்சுமி,ரமேஷ், கோகிலா, தங்கபாண்டி, வீரபாண்டி, கபிலஷா ஆகியோர் செய்திருந்தனர்.

Tags:    

Similar News