உள்ளூர் செய்திகள்
மறைந்த காவலர் குடும்பத்தினருக்கு நிதியுதவி
- உதவும் கரங்கள் குழுவில் உள்ளவர்கள் திரட்டினர்
- மறைந்த காவலர் குடும்பத்தினருக்கு நிதியுதவி வழங்கப்பட்டது
அரியலூர்:
அரிலூர் மாவட்டம் திருமானூர் காவல் நிலையத்தில் தலைமைக் காவலராக பணிபுரிந்த கலைச் செல்வம் உடல் நலக் குறைவால் கடந்த ஜனவரி மாதம் உயிரிழந்தார். இந்தநிலையில் அவரது குடும்பத்திற்கு உதவும் வகையில், காவலர் உதவும் கரங்கள் குழுவில் உள்ள காவலர்கள் 5,807 பேர் நிதி திரட்டினர். இதன்படி, திரட்டப்பட்ட ரூ.29,03,500-ஐ குவின் அரியலூர் மாவட்ட பொறுப்பாளர்கள், திருமானூர் சென்று கலைச் செல்வன் குடும்பத்தினரிடம் நேரில் வழங்கினர்.