உள்ளூர் செய்திகள் (District)

ஆட்டுக்கொல்லி நோய்த் தடுப்பூசி முகாம்

Published On 2022-07-08 08:52 GMT   |   Update On 2022-07-08 08:52 GMT
  • ஆட்டுக்கொல்லி நோய்த் தடுப்பூசி முகாம் நடைபெற்றது
  • 400 ஆடுகளை விவசாயிகள் கொண்டுவந்தனர்

அரியலூர்:

அரியலூர் அருகேயுள்ள கடுகூர் கிராமத்தில் ஆட்டுக்கொல்லி நோய்த் தடுப்பூசி முகாம் நடைபெற்றறது. தேசிய கால்நடை நோய்த் தடுப்புத் திட்டத்தின் கீழ், கால்நடைப் பராமரிப்புத் துறை சார்பில் நடத்தப்பட்ட முகாமில், கடுகூர் கால்நடை உதவி மருத்துவர் குமார்,கால்நடை பராமரிப்பு உதவியாளர் ராமலிங்கம் உள்ளிட்டோர் அடங்கிய கால்நடை மருத்துவ குழுவினர் கலந்து கொண்டு 250 வெள்ளாடுகளுக்கும், 150 செம்மறியாடுகளுக்கும் ஆட்டுக்கொல்லி நோய்த் தடுப்பூசிகளைச் செலுத்தினர்.

Tags:    

Similar News