உள்ளூர் செய்திகள்
ஜெயங்கொண்டம் அருகே இன்ப மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம்
- ஜெயங்கொண்டம் அருகே இன்ப மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது
- காண்டிப தீர்த்தம் எடுத்து வந்து யாக சாலையில் பூஜை நடைபெற்றது
ஜெயங்கொண்டம்,
அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் பழைய திருச்சி ரோடு தெருவில் உள்ள ஸ்ரீ இன்ப மாரியம்மன் கோவிலில் மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதையொட்டி அம்மனுக்கு மகா பூர்ணகுடி, மகா தீபாராதனை, புறப்பாடு மற்றும் மங்கள இசை வேதபாரானியம், மூன்றாம் கால பூஜை மறறும் பல்வேறு பூஜைகள் நடைபெற்றது. தொடர்ந்து நூதன அஸ்தமன ஆறு கால யாகம் சிறப்பாக நடைபெற்றது. மேலும் காண்டிப தீர்த்தம் எடுத்து வந்து யாக சாலையில் பூஜை நடைபெற்றது. ெதாடர்ந்து சப்த கன்னிகளுக்கு பூஜை செய்யப்பட்டது. இதில் ஊர் முக்கியஸ்தர்கள் வெங்கட்ராமன், சூரிய நாராயணன், இளங்கோவன், நாட்டார் சேதுராமன் மேலும் விழா குழு நண்பர்கள், பொதுமக்கள் என 100-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.