உள்ளூர் செய்திகள்

இடையான்குடிகாடு தும்பிக்கை ஆழ்வார், வரதராஜ பெருமாள் கோவிலில் கும்பாபிஷேகம்

Published On 2023-04-27 05:51 GMT   |   Update On 2023-04-27 05:51 GMT
  • இடையான்குடிகாடு தும்பிக்கை ஆழ்வார், வரதராஜ பெருமாள் கோவிலில் கும்பாபிஷேகம் நடைபெற்றது
  • ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்

அரியலூர:

அரியலூர் மாவட்டம் இடையன்குடி காடு தும்பிக்கை ஆழ்வார், ஸ்ரீதேவி பூதேவி சமேத ஸ்ரீ வரதராஜ பெருமாள், ஆஞ்சநேயர் கோவில்களில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதனை முன்னிட்டு கடந்த 24-ம் தேதி முதல் காலம் யாக பூஜை தொடங்கி நடைபெற்றது. 25-ம் தேதி திருப்பள்ளி எழுச்சி, கோ பூஜையுடன் இரண்டாம் கால யாக பூஜையும், சாந்தி ஹோமம் பூர்ணாஹீதியுடன் மூன்றாம் கால யாக பூஜையும், தீபாராதனையும் நடைபெற்றது.

இதனை தொடர்ந்து வேத விற்பன்னர்கள் மந்திரங்கள் முழங்க, வாணவேடிக்கை, பட்டாசு முழக்கத்துடன் கும்பாபிஷேகம் நேற்று நடைபெற்றது. கும்பாபிஷேகத்தை முன்னிட்டு அன்னதானம் நடைபெற்றது. இரவு வாணவேடிக்கை, மேளதாளத்துடன் சுவாமி திருவீதி உலா நடைபெற்றது. கும்பாஷேக விழாவில் இடையான்குடிகாடு மற்றும் சுற்றுவட்டாரத்தை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் கலந்த கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு தளவாய் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

Tags:    

Similar News