உள்ளூர் செய்திகள் (District)
- முனீஸ்வரன் கோவில் திருவிழாவை முன்னிட்டு மஞ்சு விரட்டு
- எம்எல்ஏ கொடியசைத்து தொடங்கி வைத்தார்
உடையார்பாளையம்,
அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் சட்டமன்ற தொகுதி, காட்டாகரம் ஊராட்சி, சுத்துக்குளம் கிராமத்தில் முனீஸ்வரர் கோவில் திருவிழாவை முன்னிட்டு நடைபெற்ற மஞ்சுவிரட்டு விழாவை, எம்.எல்.ஏ.கண்ணன் கொடியசைத்து துவக்கி வைத்தார். விழாவில் சமூக நீதிப் பேரவை தலைவர் வழக்கறிஞர் பாலு, காவல் துணை கண்காணிப்பாளர் ராஜா சோமசுந்தரம், பொதுக்குழு உறுப்பினர் பொய்யாமொழி, ஜெயங்கொண்டம் தெற்கு ஒன்றிய கழக செயலாளர் மணிமாறன், மாவட்ட மீனவர் அணி அமைப்பாளர் ராஜேந்திரன், ஒன்றிய குழு உறுப்பினர் ரேவதி சௌந்தரராஜன், ஒப்பந்தக்காரர் துரைமாறன் மற்றும் கழக நிர்வாகிகள், நாட்டாண்மைகள், ஊர் பொதுமக்கள், மாடுபிடி வீரர்கள் கலந்துகொண்டனர்.