உள்ளூர் செய்திகள் (District)
குறைதீர்க்கும் குமரன் கோவிலில் பங்குனி உத்திர விழா
- கல்லங்குறிச்சி குறைதீர்க்கும் குமரன் கோயிலில் பங்குனி உத்திர விழா நடைபெற்றது
- பால், தயிர் உள்ளிட்ட பல்வேறு அபிஷேகங்கள் முருகனுக்கு நடைபெற்றது
அரியலூர்,
அரியலூர் அடுத்த கல்லங்குறிச்சி சாலையிலுள்ள குறைதீர்க்கும் குமரன் கோயிலில் பங்குனி உத்திரம் விழா நடைபெற்றது. பங்குனி உத்திர திருவிழாவை முன்னிட்டு, அங்குள்ள முருகனுக்கு பால், தயிர்,பன்னீர், சந்தனம், தீருநீர், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட பொருள்களால் சிறப்பு அபிஷேகமும், அலங்காரமும் நடைபெற்றது. சுற்றுவட்டார பகுதி மக்கள் திரளாக கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். அதன்பின்னர் கோயிலில் அன்னதானம் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது.