உள்ளூர் செய்திகள் (District)

தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்

Published On 2023-03-16 03:43 GMT   |   Update On 2023-03-16 03:43 GMT
  • அரியலூரில் நாளை தனியார் வேலை வாய்ப்பு முகாம் நடைபெறுகிறது.
  • காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறுகிறது என்று கலெக்டர் தகவல்

அரியலூர்,

அரியலூர் மாவட்ட கலெக்டர் பெ.ரமணசரஸ்வதி தெரிவித்துள்ளதாவது, அரியலூர் மாவட்டம், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், மாவட்ட இயக்க மேலாண்மை அலகின் மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் தீன் தயாள் உபாத்யாய கிராமின் கெளசல்யா யோஐனா திட்டத்தின் கீழ், கிராமம் மற்றும் நகர்புறத்திலுள்ள படித்து வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் பயன்பெறும் வகையில் மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நாளை (17-ந் தேதி) அன்று அரியலூர் அரசினர் கலைக் கல்லூரியில் காலை 9 முதல் பிற்பகல் 3 மணி வரை நடைபெற உள்ளது. இம்முகாமில் 5 ஆம் வகுப்பு முதல் ஐடிஐ, டிப்ளமோ, இளநிலை, முதுநிலை பட்டப்படிப்பு மற்றும் பொறியியல் படித்த வேலைவாய்ப்பற்ற 18 முதல் 45 வயது வரை உள்ள ஆண் பெண் இருபாலரும், தங்களது சுய விபர குறிப்பு, ஆதார் அட்டை நகல், கல்விச் சான்றிதழ் நகல்கள் மற்றும் புகைப்படம் ஆகியவற்றுடன் கலந்து கொண்டு பயன்பெறலாம்.

Tags:    

Similar News