உள்ளூர் செய்திகள்

புதிய தொழில்நுட்பங்களை அறிந்துகொள்ள மாணவர்கள் புத்தகங்களை படிக்க வேண்டும் - அமைச்சர் சிவசங்கர்

Published On 2023-04-24 06:50 GMT   |   Update On 2023-04-24 06:50 GMT
  • அரியலூரில் 7-ம் ஆண்டு புத்தக திருவிழாவை தொடங்கி வைத்து பேச்சு
  • புதிய, புதிய புத்தகங்களை வாங்கி படிக்க அறிவுரை

அரியலூர்,

அரியலூர் அரசினர் மேல்நிலைப்பள்ளி விளையாட்டு மைதானத்தில் மாவட்ட நிர்வாகம், தமிழ்பண்பாட்டு பேரமைப்பு, தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கமும் இணைந்து 7ஆம் ஆண்டு புத்தகத்திருவிழா தொடங்கியது.கலெக்டர் பெ.ரமணசரஸ்வதி தலைமையில், மாவட்ட வருவாய் அலுவலர் கலைவாணி வரவேற்று பேசினார், போக்குவரத்துத்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் புத்தகதிருவிழா அரங்கினை துவக்கி வைத்து சிறப்புரையாற்றினார்.அப்போது அவர் கூறியதாவது,நமது மாவட்டம் சிறிய மாவட்டம். மக்கள் தொகைக்கு ஏற்ற வகையில் புத்தகங்கள் விற்பனையாகும். மாவட்ட மக்கள் பெருமளவு திரண்டு வந்து புத்தகங்கள் வாங்க வேண்டும். நமது முதல்-அமைச்சர் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். அரசுப் பள்ளியில் படித்து உயர்க்கல்விக்கு செல்லும் மாணவர்களுக்கும் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். அதில் ஒன்று தான் நான் முதல்வன் திட்டம். இது போன்றத்திட்டங்களை மாணவர்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.புத்தக வாசிப்பு அனைவரையும் உயர்ந்த இடத்துக்கு கொண்டு செல்லும். மாணவர்கள், புதிய தொழில்நுட்பங்களை அறிந்து கொள்ள வேண்டும். அதற்காக புதிய புதிய புத்தகங்களை வாங்கி படிக்க வேண்டும். நான் கலந்து கொள்ளும் புத்தக கண்காட்சிகளில் நிச்சயம் புத்தகங்களை வாங்கி வருவேன். அதுபோல, இன்றைய தினமும் புத்தகங்களை வாங்கியுள்ளேன். இவ்வாறு அவர் பேசினார்.இந்நிகழ்ச்சியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பெரோஸ்கான்அப்துல்லா, எம்.எல்.ஏ.க்கள் சின்னப்பா, கண்ணன், நகராட்சி தலைவர் சாந்திகலைவாணன், தமிழ்பண்பாட்டு பேரவை தலைவர் சீனிபாலகிருஷ்ணன், பொறுப்பாளர்கள் புலவர் இளங்கோ, புகழேந்தி, நல்லப்பன், ஆர்டிஓ ராமகிருஷ்ணன், தாசில்தார் கண்ணன், சந்திரசேகர், பள்ளி சரக ஆய்வாளர் பழனிசாமி உட்பட பலர் கலந்துகொண்டனர்,நிகழ்ச்சி முடிவில் தமிழ்நாடு ஊரக வாழ்வாதரஇயக்க திட்ட இயக்குனர் முருகண்ணன் நன்றி கூறினார்.

Tags:    

Similar News