உள்ளூர் செய்திகள்

தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை

Published On 2022-08-19 09:02 GMT   |   Update On 2022-08-19 09:02 GMT
  • தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
  • மகன் வெளிநாட்டுக்கு சென்றதால்

அரியலூர்:

அரியலூர் மாவட்டம் திருமானூர் ஒன்றியத்துக்குட்பட்ட மேல கருப்பூர் கிராமத்தை சேர்ந்தவர் சந்திரசேகர் (வயது 54), கட்டிட தொழிலாளி. இவரது ஒரே மகன் வல்லரசை பிழைப்புக்காக தாய்லாந்து நாட்டிற்கு கடந்த 2 வாரங்களுக்கு முன்பு அனுப்பி வைத்துள்ளார். இதனால் மன உளைச்சலில் இருந்த சந்திரசேகர் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் பூச்சி மருந்து குடித்து மயங்கி கிடந்தார். இதையடுத்து அப்பகுதி மக்கள் அவரை மீட்டு அரியலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார். இந்த சம்பவம் குறித்து கீழப்பழுவூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்."

Tags:    

Similar News