உள்ளூர் செய்திகள் (District)

முன்விரோதம் தகராறில் பெண் மீது தாக்குதல்

Published On 2023-11-09 07:49 GMT   |   Update On 2023-11-09 07:49 GMT
  • அதே பகுதி யைச் சேர்ந்த பாவாடை என்ப வர் குடிசை வீடு கட்டி ஆக்கிரமிப்பு செய்திருந்தார்.
  • கடலூர் கலெக்டர் அலுவலகத்தில் ஆக்கிர மிப்பு அகற்றுவது தொடர் பாக குறித்து மனு கொடுத்தார்.

கடலூர்:

பண்ருட்டி அருகே மந்தி பாளையம் பகுதியில் புதி தாக அமைக்கப்பட்ட மனைப்பி ரிவில் சுமார் 30-க்கும் மேற்பட்ட குடும் பத்தினர் வசித்து வருகின்ற னர். இவர்க ளுக்கு குடிநீர் தொட்டி அங்க ன்வாடி மையம் அமைப்ப தற்காக ஒதுக்கப்பட்ட பொது இடத்தினை அதே பகுதி யைச் சேர்ந்த பாவாடை என்ப வர் குடிசை வீடு கட்டி ஆக்கிரமிப்பு செய்திருந்தார். இதுகுறித்து அதே பகுதி யைச் சேர்ந்த திருஞான மூர்த்தி மனைவி செந்தாமரை (வயது34) தலைமையில் 30-க்கும் மேற்பட்டோர் கடலூர் கலெக்டர் அலுவலகத்தில் ஆக்கிர மிப்பு அகற்றுவது தொடர்பாக குறித்து மனு கொடுத்தார்.

இதன் காரண மாக ஆத்திரமடைந்த பாவா டை மற்றும் அவரது ஆதர வாளர்க ளுடன் செந்தா மரை வீட்டிற்கு சென்று செந்தா மரை தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனர். இதில் காயமடைந்த செந்தா மரை பண்ருட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப் பட்டு பின் மேல்சிகிச் சைக்கு கடலூர் அரசு மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து செந்தாமரை புதுப்பேட்டை போலீசில் கொடுத்த புகாரின் பேரில் பாவாடை, நாகராஜ், துரைராஜ் உள்ளிட்ட 10 பேர் மீது வழக்கு பதிந்து போலீசார் தேடி வருகின்றனர்.

Tags:    

Similar News