உள்ளூர் செய்திகள்

மாணவர்கள் தங்கள் குடும்பத்தினருடன் ஆசிரியர்கள் காலில் விழுந்து ஆசிபெற்றனர்.

ஆடுதுறையில், பள்ளி மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி

Published On 2023-05-02 09:51 GMT   |   Update On 2023-05-02 09:51 GMT
  • கடந்த 1993-ம் ஆண்டு 46 மாணவர்கள் 12-ம் வகுப்பு படித்தனர்.
  • ஆசிரியர்களுக்கு பொன்னாடை போர்த்தி மாலை அணிவித்தனர்.

சுவாமிமலை:

கும்பகோணம் அருகே ஆடுதுறை குமரகுருபரன் பள்ளியில் கடந்த 1993-ம் ஆண்டு 46 மாணவர்கள் 12-ம் வகுப்பு படித்தனர். தற்போது அவர்களில் 6 பேர் இறந்து விட்டனர்.

இந்நிலையில், 30 ஆண்டுகளுக்கு பிறகு நேற்று அதே பள்ளியில் படித்தவர்கள் ஒன்று கூடினர்.

அப்போது அவர்களுடன் படித்து இறந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தி அவர்களின் குடும்பத்தினருடன் கலந்துரையாடினர்.

பின்பு, தாங்கள் படித்த போது இருந்த ஆசிரியர்களுக்கு பொன்னாடை போர்த்தி மாலை அணிவித்தனர்.

மேலும், மாணவர்கள் தங்கள் குடும்பத்தினருடன் ஆசிரியர்கள் காலில் விழுந்து ஆசிபெற்றனர்.

அப்போது, தங்கள் பழைய நினைவுகளை கூறி அனைவரும் கலந்துரையாடியனர்.

Tags:    

Similar News