- பெண் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்தல் வேண்டும்.
- பெண் குழந்தைகளின் கல்வியை மேம்படுத்த வேண்டும்.
நாகப்பட்டினம்:
நாகை அவுரி திடலில் சிக்கல் வேளாண்மை அறிவியல் மையம், தானம் அறக்கட்டளை சார்பில் பெண்கள் முன்னேற்றத்திற்கான விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு சிக்கல் வேளாண்மை அறிவியல் நிலைய தோட்டக்கலை தொழில்நுட்ப வல்லுநர் ரகு தலைமை, பேரணியை கொடியசைத்து தொடங்கி வைத்தார் தாங்கினார்.
நாகை புதிய பஸ் நிலையம் அவுரி திடலில் தொடங்கிய பேரணியானது நெல்லுக்கடை மாரியம்மன் கோவில் அருகே நிறைவடைந்தது.பெண் குழந்தைகள் உயிர் வாழ்வதையும், அவர்களின் பாதுகாப்பையும் உறுதி செய்தல், பெண் குழந்தைகளின் கல்வியை மேம்படுத்துதல், பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளின் பாதுகாப்பு சட்டத்தினை கடுமையாக்கவேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.
இது நாகை, சீர்காழி, காரைக்கால், கீழ்வேளூர், தலைஞாயிறு, வேதாரண்யம் பகுதிகளை சேர்ந்த மகளிர் சுய உதவிக் குழுவினர் 100-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.
முடிவில் தானம் அறக்கட்டளை மண்டல ஒருங்கிணைப்பாளர் சரவணன் நன்றி கூறினார்.