ஏ.டி.எம். மையத்தில் பணம் திருடிய மர்ம நபர்
- மர்ம நபர் ஒருவர் உதவி செய்வது போல் நடித்து அந்த பெண்ணின் வங்கி கணக்கில் இருந்து 8,500 பணத்தை திருடியுள்ளார்.
- ஏ.டி.எம் கொடுத்து பணம் எடுத்து கொடுக்க சொல்லி இருக்கிறார்.
தருமபுரி,
தருமபுரி மாவட்டம், பாலக்கோடு அடுத்துள்ள குண்டாங்காடு பகுதியை சேர்ந்தவர் சண்முகம். இவரது மனைவி முனியம்மாள் (வயது35). இவர் நேற்று பாலக்கோடு பஸ்நிலையம் அருகில் உள்ள ஏ.டி.எம். மையத்தில் பணம் எடுக்க சென்றார்.
அப்போது மர்ம நபர் ஒருவர் உதவி செய்வது போல் நடித்து அந்த பெண்ணின் வங்கி கணக்கில் இருந்து 8,500 பணத்தை திருடியுள்ளார்.
பாலக்கோடு அருகே உள்ள எர்ரசிகல அள்ளி கிராமத்தை சேர்ந்தவர் ராஜீவ் காந்தி (வயது28). இவர் டாட்டா ஏசி வாகன ஓட்டுனராக இருந்து வருகிறார்.
இந்நிலையில் பாலக்கோடு அருகே உள்ள ஏ.டி.எம் - ல் பணம் எடுக்க சென்றபோது அருகில் உள்ளவரிடம் ஏ.டி.எம் கொடுத்து பணம் எடுத்து கொடுக்க சொல்லி இருக்கிறார்.
இந்நிலையில் அவர் பணம் எடுத்துவிட்டு வேறு ஒரு ஏ.டி.எம் கார்டை இவரிடம் கொடுத்துள்ளார். பின்னர் ஏ.டி.எம்.மில் உள்ள ரூ.38,000 பணம் எடுத்துள்ளது தெரியவந்தது.
இது குறித்து 2 பேர் கொடுத்த புகாரின் பேரில் பாலக்கோடு போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.