உள்ளூர் செய்திகள் (District)

கோவையில் அரசு பஸ் கண்டக்டர் மீது தாக்குதல்

Published On 2023-04-06 09:23 GMT   |   Update On 2023-04-06 09:23 GMT
  • தங்கவேலுக்கும் சுதர்சனுக்கும் இடையே மீதி பணம் கொடுப்பதில் தகராறு ஏற்பட்டது.
  • கண்டக்டர் தங்கவேலு பொள்ளாச்சி கிழக்கு போலீசில் புகார் செய்தார்.

கோவை,

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள மகாலிங்கபுரம் ஆறுமுகம் நகரை சேர்ந்தவர் தங்கவேல் (வயது 57).

இவர் அரசு போக்குவரத்து கழகம் பொள்ளாச்சி கிளையில் கண்டக்டராக வேலை பார்த்து வருகிறார். கடந்த மாதம் தங்கவேலுக்கும், திருப்பூர் மாவட்டம் உடுமலையை சேர்ந்த சுதர்சன் (21) என்பவருக்கு இடையே மீதி பணம் கொடுப்பதில் தகராறு ஏற்பட்டது.

சம்பவத்தன்று தங்கவேலு பொள்ளாச்சி பழைய பஸ் நிலையத்தில் பஸ்சில் அமர்ந்து இருந்தார். அப்போது அங்கு வந்த சுதர்சன் கடந்த மாதம் என்ன தப்பா பேசுனல, இப்ப பேசுடா பார்க்கலாம் என கூறி கண்டக்டர் தங்கவேலுவை தாக்கினார். பின்னர் அங்கு இருந்து தப்பிச் சென்றார்.

இது குறித்து கண்டக்டர் தங்கவேலு பொள்ளாச்சி கிழக்கு போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

Similar News