உள்ளூர் செய்திகள்
கடலூர் மாவட்டத்தில் பறிமுதல் செய்யப்பட்ட 50 வாகனங்கள் ஏலம்
- கடலுார் மாவட்டத்தில் மதுபான கடத்தலுக்கு பயன்படுத்தபட்ட மொத்தம் 50 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
- கடலூர் புதுநகர் போலீஸ் நிலைய வளாகத்தில் மதுவிலக்கு போலீசார் மற்றும் மதுவிலக்கு துறையினர் மூலம் ஏலம் விடப்பட்டது.
கடலூர்:
கடலுார் மாவட்டத்தில் உள்ள தாலுக்கா போலீஸ் நிலையங்கள் மற்றும் மதுவிலக்கு அமல்பிரிவில் இருந்து மதுவிலக்கு சம்மந்தமாக பதிவு செய்யபட்ட வழக்கில், மதுபான கடத்தலுக்கு பயன்படுத்தபட்ட நான்கு சக்கர வாகனங்கள்8, மூன்றுச்சக்கர வாகங்கள் 4, மற்றும் இரண்டு சக்கர வாகனங்கள்38 என மொத்தம் 50 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த 50 வாகனங்களையும் அரசுக்கு ஆதாயம் வரும் பொருட்டு கடலூர் மாவட்ட கலெக்டர் உத்தரவின்படி இன்று (4 ந்தேதி) காலையில் கடலூர் புதுநகர் போலீஸ் நிலைய வளாகத்தில் மதுவிலக்கு போலீசார் மற்றும் மதுவிலக்கு துறையினர் மூலம் ஏலம் விடப்பட்டது. ஏராளமான வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் பொது ஏலத்தில் கலந்து கொண்டனர். பின்னர் தங்களுக்கு தேவையான வாகனங்களை ஏலம் மூலமாக எடுத்தனர். தொடர்ந்து ஏலம் நடைபெற்று வருகிறது.