உள்ளூர் செய்திகள்

விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி

Published On 2022-12-19 10:03 GMT   |   Update On 2022-12-19 10:03 GMT
  • விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி ஜவளகிரி மற்றும் தளி யில் நடந்தது.
  • கலை நிகழ்ச்சிகள் மூலம் பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

தேன்கனிக்கோட்டை,

கிருஷ்ணகிரி மாவட்டம தேன்கனிக்கோட்டை தாலுகாவிற்கு உட்பட்ட ஜவளகிரி வனத்துறை சார்பில் வனப்பகுதியில் தீ விபத்து ஏற்படுவதை தடுக்க விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி ஜவளகிரி மற்றும் தளி யில் நடந்தது.

வன சரகர் சுகுமார் தலைமை தாங்கினார். நிகழ்ச்சியை வன உதவி பாதுகாவலர் ராஜ மாரியப்பன் தொடங்கி வைத்தார். பாரதி கிராமிய கலை வளர்ச்சி மையக் குழுவினர் வனப்பகுதியில் தீ விபத்து ஏற்படுவது தடுக்க வேண்டும்,

வன விலங்குகளை வேட்டையாடுவதை தடுக்க வேண்டும், உரிமை இல்லாத நாட்டுத் துப்பாக்குகளை வனத்துறையிடம் ஒப்படைக்க வேண்டும்.

பட்டா நிலங்களில் மின்வேலி அமைக்க கூடாது என்று கலை நிகழ்ச்சிகள் மூலம் பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

Tags:    

Similar News