உள்ளூர் செய்திகள்

முதலுதவி குறித்து செயல்விளக்கம் அளிக்கப்பட்டது.

முதலுதவி குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி

Published On 2023-11-24 09:20 GMT   |   Update On 2023-11-24 09:20 GMT
  • பொதுமக்களுக்கு விபத்து காலங்களில் முதலுதவி அளிக்கப்படுவது குறித்து செயல்விளக்கம் அளிக்கப்பட்டது.
  • வாகன ஓட்டுனர்கள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

நாகப்பட்டினம்:

நாகப்பட்டினம் மாவட்ட கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் உத்தரவின் பேரில் 108 அவசர கால விபத்து முதலுதவி செயல் விளக்கம் அளிப்பது தொடர்பாக 108 ஆம்புலன்ஸ் மேலாளர்கள் சாம் சுந்தர், சவுரிராஜன் தலைமையில் நாகை வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் சாலை விபத்தில் முதலுதவி குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடை பெற்றது.

இதில் ஓட்டுனர்கள் மற்றும் பொது மக்களுக்கு விபத்து காலங்களில் முதலுதவி அளிக்கப்படுவது குறித்து செய்முறை செயல் விளக்கத்துடன் செய்து காண்பிக்கப்பட்டது.

இதில் வட்டாரப் போக்குவரத்து அலுவலர் பழனிச்சாமி, மோட்டார் வாகன ஆய்வாளர் பிரபு, அனைத்து ஓட்டுநர் பயிற்சி உரிமையாளர்களும் வாகன ஓட்டுனர்களும் மற்றும் பொதுமக்களுக்கு கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News