குடிபோதை தகராறில் ஒருவர் அடித்து கொலை
- வாக்குவாதம் ஏற்பட்டதில் அருகில் இருந்தவர்கள் மணிவண்ணனை சமாதானப்படுத்தி வீட்டிற்கு அனுப்பி வைத்துள்ளனர்.
- மணிவண்ணன் இரும்பு பைப்பால் அடித்து விட்டு தப்பி ஓடி விட்டதாக கூறப்படுகிறது.
வேதாரண்யம்:
வேதாரண்யம் தாலுகா வாய்மேடு தெற்குபகுதியை சேர்ந்த சேகர் என்பவரது புதுமனை புகுவிழா நிகழ்ச்சி நடைபெற்றது அப்போது இரவு 11 மணி அளவில் வாய்மேடு மேற்கை சேர்ந்த செல்வகுமார்( வயது 46) மற்றும் வாய்மேடு தெற்குபகுதியை சேர்ந்தமணிவண்ணன் (28) ஆகிய இருவரும் மது போதையில் இருந்துள்ளனர்
அப்போது அவர்களு க்குள் வாக்குவாதம் ஏற்பட்டதில் அருகில் இருந்த வர்கள் மணிவண்ணனை சமாதானப்படுத்தி வீட்டிற்கு அனுப்பி வைத்துள்ளனர் பிறகு இரவு11 .30 மணி அளவில்செல்வகுமார் சைக்கிளில் தனது வீட்டி ற்கு செல்லும்போது மன்னாடி நகர் செல்லும் தெற்கு ஓடை அருகில் செல்வக்குமார் சத்தம் போட்டதாகவும் அப்போது மணிவண்ணன் இரும்பு பைப்பால் அடித்து விட்டு தப்பி ஓடி விட்டதாகவும் கூறப்படுகிறது.
அருகில் இருந்தவர்கள் செல்வகுமாரை மீட்டு திருத்துறைப்பூண்டி மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர் மருத்துவர்கள் பரிசோ தனை செய்துவிட்டு வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். இது குறித்து வாய்மேடு போலீசார் வழக்கு பதிவு செய்து மணிவண்ணனை காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரித்து வருகின்றனர்.