உள்ளூர் செய்திகள் (District)
- தேனியில் பைக் திருடப்பட்டது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்
- இதேபோல் உத்தமபாளையம் அருகே மர்ம நபர்கள் பைப்புகளை திருடிச்சென்றது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.
தேனி:
தேனி ரெயில்வே கேட் அருகே வசித்து வருபவர் செந்தில்குமார் (வயது 43). இவர் தனது வீட்டு முன்பு மோட்டார் சைக்கிளை நிறுத்திச் சென்றார். அதனை மர்ம நபர்கள் திருடிச் சென்று விட்டனர். இது குறித்து தேனி போலீசில் செந்தில்குமார் புகார் அளித்தார்.
அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.
உத்தமபாளையம் அருகே நாராயணத் தேவன்பட்டியைச் சேர்ந்தவர் சொக்கலிங்கம் (வயது 68). இவரது தோட்டத்தில் இருந்த பைப்புகளை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர். இது குறித்த புகாரின் பேரில் ராயப்பன்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.