உள்ளூர் செய்திகள்

தண்டவாளத்தில் தலை நசுங்கிய நிலையில் வாலிபர் பிணம்

Published On 2023-04-29 09:54 GMT   |   Update On 2023-04-29 09:54 GMT
  • தஞ்சாவூர் ரெயில்வே இருப்பு பாதை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
  • வாலிபரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தஞ்சை அரசு மருத்துவகல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

தஞ்சாவூர்:

தஞ்சை அடுத்த பூதலூர் அருகே உள்ள ரெயில்வே தண்டவாளத்தில் இன்று காலை 42 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் தலை நசுங்கிய நிலையில் பிணமாக கிடந்தார்.

இதனை அந்த வழியாக சென்றவர்கள் பார்த்து தஞ்சாவூர் ரெயில்வே இருப்பு பாதை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

இதையடுத்து இன்ஸ்பெக்டர் சாந்தி உத்தரவின்பேரில் சிறப்பு சப்- இன்ஸ்பெக்டர்கள் குமார் ,சுரேஷ் , ஏட்டு சரவணசெல்வம் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பிணத்தை பார்வையிட்டு விசாரித்தனர்.

ஆனால் இறந்து கிடந்தவர் யார்? எந்த ஊர்? என்ற விபரம் தெரியவில்லை.

இதையடுத்து அந்த வாலிபரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தஞ்சை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இது குறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து அந்த வாலிபர் தண்டவாளத்தை கடக்க முயலும் போது மயிலாடுதுறையில் இருந்து திருச்சி நோக்கி சென்ற பயணிகள் ரெயிலில் அடிபட்டு இறந்தாரா? அல்லது தற்கொலை செய்து கொண்டாரா ? என்ற பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News