உள்ளூர் செய்திகள்

புத்தக கண்காட்சியில் கலந்து கொண்டவர்களை படத்தில் காணலாம்.

வேடசந்தூரில் புத்தக கண்காட்சி

Published On 2022-07-07 06:37 GMT   |   Update On 2022-07-07 06:37 GMT
  • வேடசந்தூரில் 2-ம் ஆண்டாக தேசிய புத்தகக் கண்காட்சி அரசு கிளை நூலகத்தில் தொடங்கியது.
  • இந்த கண்காட்சி வருகிற 20-ந்தேதி வரை நடைபெறுகிறது.

வேடசந்தூர்:

வேடசந்தூரில் 2-ம் ஆண்டாக தேசிய புத்தகக் கண்காட்சி அரசு கிளை நூலகத்தில் தொடங்கியது.

மாவட்ட நூலக அலுவலர் சரவணக்குமார் முன்னிலை வகித்தார். வேடசந்தூர் பேரூராட்சி தலைவர் மேகலா கார்த்திகேயன், ஊரர்டசி ஒன்றியக்குழு துணை தலைவர் சவுடீஸ்வரி கோவிந்தன் இணைந்து புத்தகக் கண்காட்சியை திறந்து வைத்தனர்.

மண்டல மேலாளர் கிருஷ்ணமூர்த்தி, கிளை மேலாளர் பண்டரி நாதன்சி, கிளை நூலகர் பச்சையம்மாள் சந்திர சேகர், முத்துச்சாமி, முருகானந்தம் உள்பட பலர் கலந்துகொண்டனர். இந்த கண்காட்சி வருகிற 20-ந்தேதி வரை நடைபெறுகிறது.

Tags:    

Similar News