உள்ளூர் செய்திகள் (District)

தாய்ப்பால் வார விழா நடந்தது.

திருவாரூர் கல்லூரியில் தாய்ப்பால் வார விழா

Published On 2023-08-05 09:13 GMT   |   Update On 2023-08-05 09:13 GMT
  • மாணவ -மாணவிகளுக்கு கட்டுரை போட்டி நடத்தப்பட்டது.
  • தாய்ப்பாலும் அதன் தனித்தன்மையும் பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

திருவாரூர்:

திருவாரூர் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் கலை அறிவியல் கல்லூரியில் உலக தாய்ப்பால் வாரத் தினத்தை முன்னிட்டு தாய்ப்பாலும் அதன் தனித்தன்மையும் பற்றி விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

விழிப்புணர்வை இன்னர்வீல் சங்கம் திருவாரூர் (கிளை) அதிகாரிகள் நேதாஜி கல்லூரியுடன் இணைந்து , கல்லூரியின் முதல்வர் சிவகுநாதன் வரவேற்புரை வழங்கினார். தாய்ப்பாலும் அதன் தன்மையையும் பற்றியும் கல்லூரி இயக்குனர் மற்றும் மகரிஷி வித்யா மந்திர் சி.பி.எஸ்.இ. பள்ளியின் தாளாளர் விஜய சுந்தரம் சிறப்புரையாற்றி னார்.

இன்னர்வீல் சங்கம் அதிகாரிகள் மாலதி செல்வம், செயலாளர் சக்தி கண்ணு ஜோதி, பொருளாளர் சூரியகலா சந்திரசேகர், துணைத்தலைவி பவானி பாண்டியன், முன்னாள் தலைவிகள் விஜயகுமாரி விவேகானந்தன், சிவசங்கரி அகிலன் மற்றும் சங்க உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். சிறப்பு விருந்தினராக டாக்டர் ஜெயக்குமாரி கலந்து கொண்டு தாய்பாலின் மகத்துவம் குறித்து பேசினார்.

மாணவ -மாணவி களுக்கு கட்டுரைப் போட்டி நடத்தப்பட்டு வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது . இதில் கல்வி குழும தாளாளர் வெங்கட்ராஜுலு, செயலர் சுந்தர்ராஜ், முதன்மை செயல் அலுவலர் நிர்மலா ஆனந்த் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News