உள்ளூர் செய்திகள் (District)

கூடலூரில் பழங்குடி மக்களின் புத்தரி திருவிழா

Published On 2023-10-28 08:52 GMT   |   Update On 2023-10-28 08:52 GMT
  • அம்மனுக்கு நெற்கதிர்களை படைத்து சிறப்பு பூஜைகள்
  • ஆயிரக்கணக்கான பக்தா்கள் வேட்டைக்கொரு மகனை வழிபட்டனா்

ஊட்டி,

நீலகிரி மாவட்டம், கூடலூா் புத்தூா்வயல் பகுதியை சேர்ந்த பழங்குடி விவசாயிகள் ஐப்பசி மாதத்தில் விரதம் இருந்து புதிதாக விளைந்த நெற்கதிா்களை அறுவடை செய்து நம்பாலக்கோட்டை வேட்டைக்கொரு மகன் கோவிலுக்கு எடுத்து வந்து சுவாமிக்கு படையலிட்டு, பின்னர் அங்கு உள்ள பக்தா்களுக்கு நெற்கதிரை பிரசாதமாக வழங்குவது வழக்கம். அவற்றை வீட்டின் பூஜைஅறையில் வைத்து பாதுகாத்தால் பஞ்சம் வராது, விளைச்சல் பெருகும் என்று ஐதீகம்.

கூடலூர் நம்பாலக் கோட்டை வேட்டைக்கொரு மகன் கோவிலில் நடப்பு ஆண்டுக்கான புத்தரி திருவிழா தொடங்கியது. அப்போது விவசாயிகள் கடும் விரதமிருந்து வயற்காட்டுக்கு புறப்பட்டு சென்றனர்.

பின்னர் அங்கு விளைந்து இருந்த முதல் நெற்பயிரை அறுவடை செய்தனர். தொடர்ந்து பாரம்பரிய இசையுடன் புனித நெற்கட்டு குவியல்கள், ஒற்றப்பாறை பகவதி அம்மன் கோயிலுக்கு எடுத்து வரப்பட்டது. அங்கு அம்மனுக்கு நெற்கதிர்களை படைத்து சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன. தொடர்ந்து பழங்குடி பெண்களின் பாரம்பரிய நடன நிகழ்ச்சி நடைபெற்றது.

தொடர்ந்து விவசாயிகள் நெற்கதிர் கட்டுகளை நம்பாலக்கோட்டை வேட்டைக்கொரு மகன் கோயிலுக்கு ஊா்வலமாக கொண்டுவந்தனர். அங்கு சுவாமிக்கு படையலிட்டு அறுவடை திருவிழாவை கோலாகலமாக கொண்டாடினா்.

கூடலூர் பழங்குடி விவசாயிகளின் புத்தரி திருவிழாவில் தமிழகம் மட்டுமின்றி கா்நாடகா, கேரளா மாநிலங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தா்கள் வந்திருந்தது வேட்டைக்கொரு மகனை வழிபட்டு சென்றனா்.

Tags:    

Similar News