உள்ளூர் செய்திகள் (District)

பலியான கோவிந்தராஜ்

மோட்டார் சைக்கிள் மீது பஸ் மோதல்; ஒன்றிய கவுன்சிலரின் கணவர் பலி

Published On 2022-09-30 10:42 GMT   |   Update On 2022-09-30 10:42 GMT
  • ஜெராக்ஸ் எடுத்துவிட்டு மீண்டும் மோட்டார் சைக்கிளை பெரியதம்பி ஓட்டியுள்ளார்.
  • படுகாயமடைந்த பெரியதம்பியை அருகில் இருந்தவர்கள் மீட்டு அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.

பட்டுக்கோட்டை:

தஞ்சை மாவட்டம் பேராவூராணி அருகே உள்ள வாட்டாத்தி கொல்லைக்காடு பகுதியை சேர்ந்தவர் கோவிந்தராஜ் (வயது 62). இவர் தலையாரியாக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். இவருடைய மனைவி அமிர்தவல்லி பேராவூரணி ஒன்றிய கவுன்சிலராக பதவி வகித்து வருகிறார்.

அருகில் உள்ள இடையாத்தி கிராமத்தை சேர்ந்தவர் பெரியதம்பி. சத்துணவு அமைப்பாளராக உள்ளார். இருவரும் உறவினர்கள். பெரியதம்பியும், கோவிந்தராஜும் நாகப்பட்டினம் செல்வதற்காக இன்று காலை மோட்டார் சைக்கிளில் வந்துள்ளனர். பட்டுக்கோட்டை தாலுகா அலுவலகம் எதிரில் மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு ஜெராக்ஸ் எடுத்துவிட்டு மீண்டும் மோட்டார் சைக்கியை பெரிய தம்பி ஓட்டியுள்ளார்.

பின்புறம் கோவிந்தராஜ் அமர்ந்து சென்றார். இந்நிலையில் பட்டுக்கோட்டையில் இருந்து வேதாரண்யம் நோக்கி சென்ற அரசு பஸ் மோட்டார் சைக்கிளின் பின்பகுதியில் இடித்ததில் கீழே விழுந்த கோவிந்தராஜ் படுகாயமடைந்து சம்பவ இடத்திலேயே பலியானார்.

படுகாயம் அடைந்த பெரியதம்பியை அருகில் இருந்தவர்கள் மீட்டு பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இது குறித்து பட்டுக்கோட்டை நகர போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

Tags:    

Similar News