உள்ளூர் செய்திகள்

உறவினர் வீட்டுக்கு வந்த பெங்களூரு பொறியாளர் விபத்தில் பலி

Published On 2022-10-07 09:29 GMT   |   Update On 2022-10-07 09:29 GMT
  • படிக்கட்டில் பயணம் செய்ததாக கூறப்படுகிறது.
  • மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

தருமபுரி,

சேலம் மாவட்டத்தை சேர்ந்தவர் ஜியாஉல்கஹ் (வயது 35). இவர் பெங்களூருவில் கணினி பொறியாளராக வேலை பார்த்து வந்தார்.

தனது உறவினர் ஒருவரது வீட்டு விசேசத்துக்காக தருமபுரி வந்த அவர் குறிஞ்சிப்பாடிக்கு சென்றுள்ளார். பஸ்ஸில் சென்ற அவர் படிக்கட்டில் பயணம் செய்ததாக கூறப்படுகிறது.

ஜெம்மன அள்ளி அருகே சென்ற பொது அவர் தடுமாறி கீழே விழுந்து படுகாயம் அடைந்தார்.

தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இந்த விபத்து குறித்து மதிகோன்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

இந்த வாரத்தில் மட்டும் இதே பகுதியில் விபத்து மூலமாக 3-வது உயிரிழப்பு நேர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News