உள்ளூர் செய்திகள் (District)

திருமலைநாயக்கன்பாளையத்தில் குற்ற நடவடிக்கைகளை கண்காணிக்க காமிராக்கள் பொருத்தம்

Published On 2023-04-08 09:33 GMT   |   Update On 2023-04-08 09:33 GMT
  • ரூ.1.5 லட்சம் செலவில் 11 கண்காணிப்பு காமிராக்கள் பொருத்தப்பட்டுள்ளது.
  • டி.எஸ்.பி. நமச்சிவாயம் ரிப்பன் வெட்டி பயன்பாட்டிற்கு தொடங்கி வைத்தார்.

கோவை,

கோவை பெரியநாயக்கன்பாளையம் போலீஸ் நிலையம் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் குற்ற நடவடிக்கைகளை தடுக்கும் நோக்கில் தனியார் பங்களிப்புடன் பெரியநாயக்கன்பாளையம் டி.எஸ்.பி நமச்சிவாயம் மற்றும் இன்ஸ்பெக்ட்டர் தாமோதரன் ஆகியோர் பல்வேறு முக்கிய பகுதிகளில் கண்காணிப்பு காமிராக்களை அமைத்து வருகின்றனர்.

கண்காணிப்பு காமிராக்களின் இயக்கங்கள் அனைத்தும் பெரியநாயக்கன்பாளையத்தில் இருந்து கண்காணிக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. இதன் ஒரு பகுதியாக பெரியநாயக்கன்பாளையம் அருகே உள்ள திருமலை நாயக்கன்பாளையத்தில் குற்ற நடவடிக்கைகளை தடுக்கும் நோக்கில் தனியார் பங்களிப்புடன் ரூ.1.5 லட்சம் செலவில் 11 கண்காணிப்பு காமிராக்கள் பொருத்தப்பட்டுள்ளது.

இதன் தொடக்க விழாவில் பெரியநாயக்கன்பாளையம் டி.எஸ்.பி. நமச்சிவாயம் கலந்து கொண்டு 3 இடங்களில் அமைக்கப்பட்டுள்ள கண்காணிப்பு காமிராக்களை ரிப்பன் வெட்டி பயன்பாட்டிற்கு தொடங்கி வைத்தார்.

கண்காணிப்பு காமிராக்கள் அமைத்துக் கொடுத்தவர்களுக்கு சால்வை அணிவித்து பா ாட்டு தெரிவிக்கப்பட்டது.

அப்போது அங்கிருந்த பொதுமக்களிடம் போலீஸ் சூப்பிரண்டு நமச்சிவாயம் பேசும்போது, பல லட்சம் மதிப்பில் வீடுகளை கட்டுவோர் குற்ற நட டிக்கைகளை தடுக்கும் விதமாக சில ஆயிரம் மதிப்பில் கண்காணிப்பு காமிராக்களையும் பொருத்த வேண்டும்.

இதன் மூலம் குற்ற சம்பவங்களை தடுக்க முடியும் என்றார்.

Tags:    

Similar News