உள்ளூர் செய்திகள் (District)

கோவையில் பெண் ஊழியரிடம் சில்மிஷம்-ரியல் எஸ்டேட் அதிபர் மீது வழக்கு

Published On 2023-03-25 09:14 GMT   |   Update On 2023-03-25 09:14 GMT
  • கார்த்திக் என்னிடம் பாலியல் சீண்டல்களில் ஈடுபட்டு வருகிறார்.
  • பீளமேடு சப்-இன்ஸ்பெக்டர் மாடசாமி விசாரணை நடத்தி வருகிறார்

பீளமேடு,

கோவையை சேர்ந்தவர் 34 வயது இளம்பெண். இவர் பீளமேடு போலீஸ் நிலையத்தில் ஒரு புகார் கொடுத்துள்ளார். அந்த புகாரில் அவர் கூறியிருப்பதாவது:-

நான் கோவை விமான நிலையம்- காளப்பட்டி சாலையில் செயல்பட்டு வரும் தனியார் கட்டுமான நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறேன். இந்த நிறுவனத்தின் உரிமையாளராக கார்த்திக் (45) என்பவர் உள்ளார்.

கடந்த 3 மாதமாக இங்கு வேலை பார்த்து வருகிறேன். நான் அலுவலகத்தில் பணியாற்றி கொண்டிருக்கும் போது கார்த்திக் என்னிடம் பாலியல் சீண்டல்களில் ஈடுபட்டு வருகிறார்.

அத்துடன் இரட்டை அர்த்தங்களிலும் தன்னிடம் பேசுகிறார். பலமுறை கண்டித்தும் அவர் கண்டு கொள்வதில்லை. தொடர்ந்து என்னிடம் இது போன்று அவர் நடந்து வருவது மனவேதனையாக உள்ளது.மேலும் அவர் சொல்வதை கேட்கவில்லை என்றால் மிரட்டலும் விடுக்கிறார். எனவே அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் புகாரில் கூறி இருந்தார்.

இளம்பெண் கொடுத்த புகாரின் பேரில் பீளமேடு சப்-இன்ஸ்பெக்டர் மாட சாமி, கட்டுமான நிறுவன உரிமையாளர் கார்த்திக் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். 

Tags:    

Similar News