உள்ளூர் செய்திகள்

பயனாளிகளுக்கு கடன் தொகையை ஊராட்சி மன்ற தலைவர் சுப்புராமன் வழங்கினார்.

கால்நடை பராமரிப்பு கடன் வழங்கும் விழா

Published On 2022-09-13 08:16 GMT   |   Update On 2022-09-13 08:16 GMT
  • விழாவிற்கு கூட்டுறவு சங்க தலைவர் ராதாகிருஷ்ணன் தலைமை வகித்தார்.
  • 50 நபர்களுக்கு 165 மாடுகள் வாங்க ரூ. 23 லட்சத்து பத்தாயிரம் வட்டியில்லா கடன் வழங்கப்பட்டது.

வேதாரண்யம்:

நாகை மாவட்டம், வேதாரண்யம் அடுத்த ஆயக்காரன்புலம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் கால்நடை பராமரிப்பு கடன் வழங்கும் விழா நடைபெற்றது. விழாவிற்கு கூட்டுறவு சங்க தலைவர் ராதாகிருஷ்ணன் தலைமை வகித்தார்.

கருப்பம்புலம் ஊராட்சி மன்ற தலைவர் சுப்புராமன் முன்னிலை வகித்தார். கூட்டுறவு சங்க செயலாளர் வாஞ்சிநாதன் அனைவரையும் வரவேற்றார்.

நிகழ்ச்சியில் கருப்பம்புலம் ஊராட்சியில் 50 நபர்களுக்கு 165 மாடுகள் வாங்க ரூ. 23 லட்சத்து பத்தாயிரம் வட்டியில்லா கடனாக பால் உற்பத்தியாளர்கள் சங்க பயனாளிகளுக்கு வழங்கப்பட்டது.

Tags:    

Similar News