உள்ளூர் செய்திகள்

தேர்வான மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது.

கராத்தே பயிற்சியில் தேர்வான மாணவர்களுக்கு சான்றிதழ்

Published On 2022-12-20 08:04 GMT   |   Update On 2022-12-20 08:04 GMT
  • ஊராட்சி ஒன்றிய பள்ளியில் கராத்தே கலர் பெல்ட் தேர்வு செய்யும் பயிற்சி.
  • தேர்வான மாணவர்களுக்கு கலர் பெல்ட் வழங்கல்.

முத்துப்பேட்டை:

முத்துப்பேட்டை மருதங்காவெளி அரசு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் கராத்தே கலர் பெல்ட் தேர்வு செய்யும் பயிற்சி நடைபெற்றது.

இதில் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர்.

பயிற்சியின் முடிவில் தேர்வு செய்யப்பட்ட மாணவர்களுக்கு சான்றிதழ் மற்றும் பெல்ட் வழங்கும் நிகழ்ச்சி பள்ளி தலைமையாசிரியர் திருஞானம் தலைமையில் நடைபெற்றது.

இதில், மன்னார்குடி இஷின்ரியு கராத்தே தலைமை பயிற்சியாளர் கியோஷி ராஜகோபால் கலந்து கொண்டு மாணவர்களுக்கு சான்றிதழ் மற்றும் கலர் பெல்ட்களை வழங்கினார்.

நிகழ்ச்சியில் கராத்தே மாஸ்டர்கள் பழனிச்சாமி, சென்சாய் மீனாட்சி சுந்தரம், இனியன், நிகன் அபிராஜ் மற்றும் ஆசிரியர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News