உள்ளூர் செய்திகள் (District)

கோப்பு படம்.

திண்டுக்கல் அருகே தற்கொலைக்கு முயன்ற கள்ளக்காதல் ஜோடி

Published On 2023-08-28 07:24 GMT   |   Update On 2023-08-28 07:24 GMT
திண்டுக்கல் மாவட்டம் எரியோடு அருகே உள்ள நல்லமநாயக்கன்பட்டி செல்லும் வழியில் ஒரு பெண் உள்பட 2 பேர் விஷம் குடித்து மயங்கிய நிலையில் கிடந்தனர்.

திண்டுக்கல்:

திண்டுக்கல் மாவட்டம் எரியோடு அருகே உள்ள நல்லமநாயக்கன்பட்டி செல்லும் வழியில் ஒரு பெண் உள்பட 2 பேர் விஷம் குடித்து மயங்கிய நிலையில் கிடந்தனர். இது குறித்து அப்பகுதி பொது மக்கள் எரியோடு போலீ சாருக்கு தகவல் தெரிவித்த னர்.

போலீசார் சம்பவ இட த்துக்கு சென்று அவர்கள் 2 பேரையும் மீட்டு திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். போலீசார் விசாரணையில் அவர்கள் இருவரும் கள்ளக்காதல் ஜோடி என தெரியவந்தது. இது குறித்து போலீசார் தெரிவிக்கையில், வேடசந்தூர் அருகே உள்ள பூத்தாம்பட்டியைச் சேர்ந்த கீர்த்தி கர்ணன் (33). டிரை வர் வேலை பார்த்து வரு கிறார். இவருக்கு திருமண மாகி மகாலெட்சுமி என்ற மனைவியும், 3 குழந்தைகளும் உள்ளனர்.

தனது குழந்தைக்கு அடிக்கடி உடல் நிலை பாதிக்கப்பட்டதால் மகா லெட்சுமி தனது தாய் வீட்டுக்கு சென்று வந்து ள்ளார். இந்த நிலையில் கீர்த்தி கர்ணனுக்கும் அவ ரது உறவினரான சற்குணம் மனைவி பானுப்பிரியா (25) என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டது.

இந்த பழக்கம் நாள டைவில் கள்ளக்காதலாக மாறியது. இந்த விபரம் மகாலெட்சுமிக்கு தெரிய வரவே அவர் இருவரையும் கண்டித்தார். ஆனால் இவர்களின் தொடர்பு நீடித்து வந்ததால் தன்னை விவாகரத்து செய்து விட்டு பானுப்பிரியாவுடன் சேர்ந்து வாழுமாறும், அதற்கு தனக்கு எவ்வித ஆட்சேபனையும் இல்லை எனவும் கூறியுள்ளார்.

இது குறித்து எரியோடு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்த நிலையில் போலீசார் அறிவுரை கூறி அனுப்பி வைத்தனர். இதனால் வேதனையடைந்த கீர்த்தி கர்ணன் மற்றும் பானுப்பிரியா விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றது தெரிய வந்தது. உயிருக்கு ஆபத்தான நிலையில் அவர்கள் மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வரு கின்றனர்.

Tags:    

Similar News