உள்ளூர் செய்திகள்

தூய்மை நடைபயண சுகாதார விழிப்புணர்வு பேரணி

Published On 2022-11-21 09:27 GMT   |   Update On 2022-11-21 09:27 GMT
  • மக்கும் குப்பைகளை வீட்டிலேயே உரமாக்கி வீட்டுத் தோட்டத்திற்கு பயன்படுத்தலாம்.
  • கடைக்கு செல்லும் போது துணிப்பைக் கொண்டு செல்ல வேண்டும்.

திருத்துறைப்பூண்டி:

திருத்துறைப்பூண்டி ஊராட்சி ஒன்றியம், கட்டி மேடு ஊராட்சியில் தமிழக அரசு மற்றும் மாவட்ட நிர்வாக அறிவுறுத்தலின் படி உலக கழிப்பறை தினத்தினை முன்னிட்டு தூய்மை நடைபயணம் சுகாதார விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

ஊராட்சி மன்றத் தலைவர் மாலினி ரவிச்சந்திரன் தலைமை தாங்கினார். மாவட்ட குழு உறுப்பினர் சுஜாதா, ஒன்றியக் குழு உறுப்பினர் இந்திரா வெள்ளைச்சாமி, சமூக ஆர்வலர்கள்,ஞாண சேகரன், கல்வி மேலா ண்மைக் குழு உறுப்பினரும் கல்வியாளருமான ரவிச்சந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தார்.

வட்டார வளர்ச்சி அலுவலர் ( கிராம ஊராட்சி ) சிவக்குமார் பேரணியை தொடக்கிவைத்து திறந்தவெளியில் மலம் கழிக்க கூடாது, அனைவரும் கழிப்பறையை பயன்படுத்தவும், மக்கும் குப்பை, மக்கா குப்பையை தரம் பிரித்து தூய்மை காவலர்களிடம் கொடுக்கவும் மக்கும் குப்பைகளை வீட்டிலேயே உரமாக்கி வீட்டுத் தோட்டத்திற்கு பயன்படுத்தவும் தீங்கு விளைவிக்க கூடிய குப்பைகளை பாதுகாப்பாக கையாள்வது, நீர் நிலைகளில் குப்பைகளைக் கொட்டக் கூடாது, நெகிழி பயன்பாட்டை தவிர்ப்பது, கடைக்கு செல்லும் போது துணிப்பைக் கொண்டு செல்ல வேண்டும் என்றும் குப்பைகளை குப்பைத் தொட்டிகளில் மட்டுமே போட வேணடும் என வலியுறுத்தினார்.

முன்னதாக முழு சுகாதார விழிப்புணர்வு உறுதிமொழி எடுத்துக்கொள்ளப்பட்டது.

மேலும் தூய்மைக் காவலர்களுக்கு நலவாரிய அட்டை வழங்கப்பட்டது.

பேரணியில் மாணவர்கள் பதாகை ஏந்தி ஊராட்சி மன்ற அலுவலகத்திலிருந்து புறப்பட்டு கடைத்தெரு, பள்ளிவாசல் தெரு, சாலைத் தெருவழியாக பள்ளி வளாகம் சென்றடைந்தனர்.

நிகழ்வில் துணைத் தலைவர் பாக்கியராஜ், செயலர் புவனேஸ்வரன், சமூக ஆர்வலர்கள் செல்வம், ரகமத்துல்லா மற்றும் அரசு மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் பாலு, ஆசிரியர்கள் சந்திரசேகரன், ராஜேஸ் குட்டி, அய்யப்பன், ராஜா, முத்துப்பாண்டியன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News