உள்ளூர் செய்திகள் (District)

கோவை தடாகம் ரோடு வக்ர காளியம்மன் கோவில் கும்பாபிஷேகம்

Published On 2023-03-01 09:38 GMT   |   Update On 2023-03-01 09:38 GMT
  • கே.என்.ஜி. புதூர் பிரிவு பஸ் நிறுத்தம் அருகே திரி நேத்ர தசபுஜ வக்ரகாளியம்மன் கோவில் உள்ளது.
  • காலை 9 மணிக்கு கோபூஜை, வாஸ்து சாந்தி உள்ளிட்ட பூஜைகளும், மாலை 5 மணிக்கு முதல் கால பூஜையும் நடக்கிறது.

கோவை,

கோவை தடாகம் ரோடு கே.என்.ஜி. புதூர் பிரிவு பஸ் நிறுத்தம் அருகே திரி நேத்ர தசபுஜ வக்ரகாளியம்மன் கோவில் உள்ளது.

இந்த கோவில் கும்பாபிஷேகம் வருகிற 8-ந் தேதி (புதன்கிழமை) காலை 9 மணிக்கு மேல் 10 மணிக்குள் நடக்கிறது.

இதற்கான கும்பாபிஷேக விழா வருகிற 6-ந் தேதி தொடங்குகிறது. அன்று காலை 9 மணிக்கு கோபூஜை, வாஸ்து சாந்தி உள்ளிட்ட பூஜைகளும், மாலை 5 மணிக்கு முதல் கால பூஜையும் நடக்கிறது.

7-ந் தேதி காலை 8 மணிக்கு மகா பூர்ணாகுதி, எந்திர பிரதிஷ்டை, அஷ்ட பந்தன மருந்து சாத்துதல் ஆகிய நிகழ்ச்சிகளும், மாலை 5 மணிக்கு மூல மந்திர ஹோமம், மகா தீபாராதனை ஆகிய நிகழ்ச்சிகள் நடக்கின்றன.

8-ந் தேதி காலை 7 மணிக்கு விக்னேஷ்வர பூஜை, 9.15 மணிக்கு யாத்ரா தானம், கடம் புறப்பாடு, காலை 9.30 மணிக்கு விமானம் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு கும்பாபிஷேகம் நடக்கிறது.

காலை 9.45 மணிக்கு ஸ்ரீதிரி நேத்ர தசபுஜ வக்ர காளியம்மனுக்கு மகா கும்பாபிஷேகம் நடக்கிறது. 11 மணிக்கு அன்னதானம், மாலை 5 மணிக்க சிறப்பு அலங்காரம் ஆகிய நிகழ்ச்சிகள் நடக்கின்றன.

விழா ஏற்பாடுகளை சிவஸ்ரீ ஞானசேகர சிவாச்சா ரியார் மற்றும் குழுவினர் செய்து வருகிறார்கள்.  

Tags:    

Similar News