இன்று குடியரசு தின விழா-நீலகிரியில் கலெக்டர் அம்ரித் தேசிய கொடி ஏற்றினார்
- நீலகிரி மாவட்ட கலெக்டர் அம்ரித் பங்கேற்று தேசியக்கொடி ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்.
- பள்ளி, கல்லூரி மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள், பழங்குடியினர்களின் பாரம்பரிய நடன நிகழ்ச்சியும் நடைபெற்றது
ஊட்டி,
நாட்டின் 74-வது குடியரசு தினவிழா இன்று நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டது.
நீலகிரி மாவட்ட நிர்வாகம் சார்பில் குடியரசு தின விழா ஊட்டி அரசு கலைக்கல்லூரி விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது.
விழாவில் நீலகிரி மாவட்ட கலெக்டர் அம்ரித் பங்கேற்று தேசியக்கொடி ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்.
அதன் பின்னர் அவர் வாகனத்தில் சென்று காவல்துறையினரின் அணிவகுப்பினை பார்வையிட்டார்.
அதனை தொடர்ந்து காவல்துறை, என்.சி.சி., பள்ளி மாணவ-மாணவிகளின் அணிவகுப்பு மரியாதை நடைபெற்றது. அதனை பார்வையிட்டு, அவர்களின் மரியாதையை கலெக்டர் அம்ரித் ஏற்று கொண்டார்.
விழாவையொட்டி பல்வேறு அரசு துறை சார்பில் நலத்திட்ட உதவிகளும் வழங்கப்பட்டது. நலத்திட்ட உதவிகளை கலெக்டர் அம்ரித் வழங்கினார்.
பள்ளி, கல்லூரி மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள், பழங்குடியினர்களின் பாரம்பரிய நடன நிகழ்ச்சியும் நடைபெற்றது
விழாவில் நீலகிரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பிரபாகரன் மற்றும் மாவட்ட அளவிலான அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.
விழாவிற்கான ஏற்பாடுகளை மாவட்ட வருவாய் அலுவலர் செய்திருந்தார்.