உள்ளூர் செய்திகள்

கல்லூரி பஸ்- லாரி மோதல்; 15 மாணவிகள் படுகாயம்

Published On 2023-02-21 08:32 GMT   |   Update On 2023-02-21 08:32 GMT
  • பஸ்சில் பயணித்த 15 மாணவிகள் படுகாயங்களுடன் உயிர் தப்பினர்.
  • போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மன்னார்குடி:

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே சுந்தரகோட்டையில் ஒரு தனியார் கல்லூரி உள்ளது. இந்த கல்லூரிக்கு பலபகுதிகளில் இருந்து மாணவிகள் பஸ்சில்வந்து படித்து செல்கின்றனர்.

இந்நிலையில் இன்று காலை கல்லூரிக்கு சொந்தமான பஸ்சில் சுமார் 20-க்கும் மேற்பட்ட மாணவிகள் கல்லூரிக்கு சென்று கொண்டிருந்தனர்.

கல்லூரி பஸ் மன்னார்குடி அருகே காளவாய்கரை பகுதியில் வந்த போது செருமங்கலம் கிராமத்தில் இருந்து மண் ஏற்றி வந்த லாரி, முன்னாள் சென்ற தனியார் கல்லூரி பேருந்து மீது மோதி விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் கல்லூரி பேருந்தில் பயணித்த 15 மாணவிகள் லேசான காயங்களுடன் உயிர் தப்பினர்.

தகவல் அறிந்து வந்த மன்னார்குடி போலீசார் விபத்தில் காயமடைந்த மாணவிகளை மீட்டு சிகிச்சைக்காக மன்னார்குடி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags:    

Similar News