உள்ளூர் செய்திகள் (District)
- சேலம் அன்னதானப்பட்டியில் கல்லூரி மாணவி மாயமானார்.
- தனியார் கல்லூரியில் படிக்கும் அவரை போலீசார் தேடி வருகின்றனர்.
அன்னதானப்பட்டி:
சேலம் அன்னதானப்பட்டி, சங்ககிரி மெயின் ரோடு பகுதியை சேர்ந்தவர் கவுரி சங்கரி ( வயது 19). இவர் திருச்செங்கோட்டில் உள்ள தனியார் கல்லூரியில் பி.ஏ. ஆங்கிலம் 2-ம் ஆண்டு படித்து வருகிறார்.
இந்த நிலையில் அருகில் உள்ள கடையில் பேனா, நோட்டுகள் உள்ளிட்டவற்றை வாங்கி வருவதாக கூறி விட்டு வெளியே சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை.
இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது குடும்பத்தினர் அக்கம் பக்கம், அருகில் உள்ள இடங்களில் தேடியும் எங்கும் அவர் கிடைக்கவில்லை. இது குறித்த புகாரின் பேரில் அன்னதானப்பட்டி போலீசார் வழக்குப் பதிவு செய்து மாயமான மாணவியை தேடி வருகின்றனர்.