உள்ளூர் செய்திகள்

மின்விளக்கு எரிய நடவடிக்கை எடுப்பது தொடர்பாக அதிகாரிகளிடம் ஆணையர் சரவணகுமார் பேசுகிறார்.

தஞ்சை சாலையில் மின் விளக்குகள் எரிய நடவடிக்கை எடுத்த ஆணையர்

Published On 2023-06-07 09:59 GMT   |   Update On 2023-06-07 09:59 GMT
  • சாலைகள் ஆக்கிரமிக்கப்பட்டு, போக்குவரத்து இடையூறாக இருந்தது.
  • நேற்று இரவில் சம்பவ இடத்திற்கு சென்று திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

தஞ்சாவூர்:

தஞ்சை மருத்துவக்கல்லூரி சாலை கே.எம்.எஸ். நகர் பூங்கா சாலை பகுதியில் நீண்ட நாட்களாக மின் விளக்குகள் எரியாமல் இருந்தன.

இதனால் இரவு நேரங்களில் அந்த வழியை கடந்து வீட்டிற்கு செல்ல பொதுமக்கள் கடும் அச்சமடைந்தனர்.

இருளை பயன்படுத்தி சமூக விரோத செயல்களும் அரங்கேறி வந்தது.

மேலும் சாலைகள் ஆக்கிரமிக்கப்பட்டு, போக்குவரத்து இடையூராக இருந்தது.

இது குறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் புகார் தெரிவித்திருந்தனர்.

இந்த நிலையில் மாநகராட்சி ஆணையர் சரவணகுமார் பொதுமக்க ளின் புகாரை தீர்க்க உடனடி நடவடிக்கையில் இறங்கினார்.

அதன்படி நேற்று இரவில் சம்பவ இடத்திற்கு சென்று திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

அப்பகுதி பொதுமக்கள், குடியிருப்போர் நல சங்கத்தினர், 46- வது வார்டு உறுப்பினரும் மண்டலகுழு தலைவருமான கலையரசன் ஆகியோரிடம் கோரிக்கை களை கேட்டறிந்தார்.

இதையடுத்து உடனடியாக அப்பகுதிக்கு மாநகராட்சி பொறியாளர் ஜெகதீசன், மின்வாரிய ஊழியர்கள் உள்ளிட்டவர்களை வரவழைத்து மின் விளக்குகள் எரிய நடவடிக்கை எடுத்தார்.

ஆணையரின் உடனடி நடவடிக்கை காரணமாக அப்பகுதியில் மின்விளக்குகள் ஒளிர்ந்தன.

இதனை தொடர்ந்து கே.எம்.எஸ் நகர் சாலை ஆக்கிரமிப்புகளை அகற்றி சாலை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என ஆணையர் சரவணகுமார் உறுதி அளித்தார்.

நீண்ட நாள் பிரச்சனையை ஒரே நாள் இரவில் தீர்த்து வைத்த ஆணையர் சரவணகுமாரை, பொதுமக்கள் பாராட்டி நன்றி தெரிவித்தனர்.

Tags:    

Similar News