கம்பைநல்லூர் ஸ்ரீராம் பள்ளி மாணவ, மாணவிகள் சாதனை
- அதே பிரிவில் வட்டு எறிதலில் லாராஸ்ரீ இரண்டாம் இடம் பிடித்துள்ளார்.
- மேசைப் பந்து இரட்டையர் பிரிவில் சஞ்சனா மற்றும் தேவிஸ்ரீ மூன்றாம் இடம் பிடித்தனர்.
மொரப்பூர்,
தருமபுரி மாவட்ட அளவில் நடைபெற்ற முதல்-அமைச்சர் கோப்பைக்கான போட்டியில் கம்பைநல்லூர் ஸ்ரீராம் பள்ளியைச் சேர்ந்த மாணவர்கள் கலந்துக் கொண்டு பல்வேறு சாதனை களை படைத்துள்ளனர்.
அதில் 12 முதல் 19 வயதுக்குட்பட்ட மாணவியர்கள் தடைத்தாண்டும் ஓட்டப்பிரிவில் மோனிஷா 9-ம் வகுப்பு படிக்கும் மாணவி மாவட்டத்தில் முதலிடம் பிடித்துள்ளார்.
அதே பிரிவில் வட்டு எறிதலில் லாராஸ்ரீ இரண்டாம் இடம் பிடித்துள்ளார். மேசைப் பந்து இரட்டையர் பிரிவில் சஞ்சனா மற்றும் தேவிஸ்ரீ மூன்றாம் இடம் பிடித்தனர்.
வெற்றி பெற்ற மாணவி மற்றும் பயிற்சி அளித்த உடற்கல்வி ஆசிரியர்கள் செல்வம், புவனேஷ்வரி, திருப்பதி, தினேஷ்குமார் ஆகியோரை ஸ்ரீராம் கல்வி நிறுவனர் வேடியப்பன், சாந்தி வேடியப்பன், பள்ளியின் நிர்வாக இயக்குநர்கள் தமிழ்மணி, பவானி தமிழ்மணி, பள்ளி முதல்வர்கள் சாரதி மகாலிங்கம், ஜான் இருதயராஜ், ஒருங்கிணை ப்பாளர்கள் மற்றும் ஆசிரியர்கள் பாராட்டினர்.