உள்ளூர் செய்திகள் (District)

பிளாஸ்டிக் பைகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

பிளாஸ்டிக் பைகள் பறிமுதல்

Published On 2023-02-14 08:24 GMT   |   Update On 2023-02-14 08:24 GMT
  • 15 கிலோ பிளாஸ்டிக் கேரி பைகள் பறிமுதல் செய்யப்பட்டன.
  • பிளாஸ்டிக் கேரி பைகள் பயன்படுத்தக் கூடாது என எச்சரிக்கை.

பாபநாசம்:

தஞ்சை மாவட்டம், பாபநா சம் பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் தமிழ்நாடு அரசால் தடை செய்யப்பட்ட பாலிதீன் பைகள் பயன்பாட்டில் உள்ளதா என செயல் அலுவலர் குமரேசன், சுகாதார ஆய்வாளர் பரமசிவம் மற்றும் பேரூராட்சி பணியாளர்கள் ஆகியோர் வணிக வளாகம், மளிகை கடை, மருந்து கடை, பூக்கடை, ஹார்டுவேர்ஸ், ஹோட்டல்களில் கேரி பைகள் பயன்பாட்டில் உள்ளதா என ஆய்வு மேற்கொண்டனர்.

ஆய்வின்போது கடைகளில் பயன்பாட்டில் இருந்த 15 கிலோ பிளாஸ்டிக் கேரி பைகள் பறிமுதல் செய்யப்பட்டன. தொடர்ந்து உரிமையாளர்களுக்கு பிளாஸ்டிக் கேரி பைகள் பயன்படுத்தக் கூடாது என எச்சரிக்கை செய்யப்பட்டும், மீறினால் அபராதம் விதிக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுத்தார்.

Tags:    

Similar News