உள்ளூர் செய்திகள் (District)

நெல்லையில் மேலும் 38 பேருக்கு கொரோனா

Published On 2022-06-26 09:00 GMT   |   Update On 2022-06-26 09:00 GMT
  • அதிகபட்சமாக நெல்லை மாநகர பகுதியில் 17 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
  • நாங்குநேரியில் 3 பேர், களக்காடு, சேரன்மகாதேவியில் தலா 2 பேருக்கும் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

நெல்லை:

நெல்லை மாவட்டத்தில் நேற்று 17 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில் இன்று புதிதாக 38 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

இதில் அதிகபட்சமாக மாநகர பகுதியில் 17 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அம்பை, பாளை, ராதாபுரத்தில் தலா 4 பேரும், நாங்குநேரியில் 3 பேர், களக்காடு, சேரன்மகாதேவியில் தலா 2 பேர், மானூர், பாப்பாக்குடியில் தலா ஒருவருக்கும் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலானோர் வீட்டு தனிமையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Tags:    

Similar News