உள்ளூர் செய்திகள் (District)

சேலம் மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசி முகாம்

Published On 2022-06-12 06:30 GMT   |   Update On 2022-06-12 06:30 GMT
சேலம் மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசி முகாம் நடந்தது.

சேலம்;

தமிழகத்தில் கொரோனா பரவல் மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளதால் 2-ம் தவணை மற்றும் பூஸ்டர் தடுப்பூசி போடாதவர்கள் உடனடியாக போட்டுக்கொள்ளுமாறு சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.

அதன்படி தமிழகம் முழுவதும் இன்று காலை கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் தொடங்கியது. இந்த முகாமில் பொதுமக்கள் 2-ம் தவணை மற்றும் பூஸ்டர் தடுப்பூசி போட்டுக்கொண்டனர்.

சேலம் மாவட்டத்தில் 5 ஆயிரத்து 240 இடங்களில் தடுப்பூசி சிறப்பு முகாம் நடத்தது. காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை நடந்தது. ஊரகப்பகுதியில் 4 ஆயிரத்து 565 இடங்களிலும், சேலம் மாநகராட்சி பகுதியில் 675 இடங்களிலும் முகாம் நடத்தப்பட்டது.

இந்த பணியில் 15 ஆயிரத்து 500 பணியாளர்கள் ஈடுபட்டனர். எனவே, இதுவரை தடுப்பூசி போடாதவர்களும், ஏற்கனவே முதல் தவணை தடுப்பூசி போட்டவர்களும், இரண்டாம் தவணை தடுப்பூசி மற்றும் பூஸ்டர் தடுப்பூசி செலுத்திக்கொள்ளுமாறு சுகாதாரத்துறை அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

Tags:    

Similar News