உள்ளூர் செய்திகள்

பலியான கறவை மாடு.

மின்சாரம் தாக்கி கறவை மாடு பலி

Published On 2022-11-08 09:41 GMT   |   Update On 2022-11-08 10:07 GMT
  • அருந்து கிடந்த மின்கம்பியை கறவை மாடு மிதித்தது.
  • அடிக்கடி இதுபோன்று விபத்து நடந்து வருகிறது.

திருத்துறைப்பூண்டி:

முத்துப்பேட்டை அருகே தண்டாங்கொல்லை பகுதியை சேர்ந்தவர் சகுந்தலா.

இவர் சம்பவத் தன்று மாடு மேய்த்துக் கொண்டிருந்தாள். அப்போது, கனமழை பெய்து கொண்டிருந்தது.

எதிர்பாராதவிதமாக முன்னாள் ராணுவத்தினர் காலனியில் மின்கம்பி அருந்து கிடந்தது, அதனை மிதித்த கறவை பசுமாடு பரிதாபமாக இறந்துவிட்டது.

இதேபோன்று, கடந்த முறை மூன்று மாடுகள் இறந்தன, இது இரண்டாவது முறையாகும்.

அடிக்கடி இதுபோன்று விபத்து நடந்து வருகிறது என மக்கள் தெரிவித்தனர்.

மின் வாரியத்தில் பல முறை மனுவும் கொடுத்துள்ளதாக தெரிவித்தனர்.

Tags:    

Similar News