உள்ளூர் செய்திகள் (District)
மசினக்குடி கூட்டுறவு சங்கத்தில் பால்வள அமைச்சர் ஆய்வு
- மேல்நிலை பள்ளி மாணவர்கள், ஆசியர்களுடன் கலந்துரையாடினார்
- வாழைத்தோட்டம் பகுதியிலும் ஆய்வு நடத்தப்பட்டது
ஊட்டி,
தமிழக பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் நேற்று மசினகுடி பகுதியில் உள்ள பால் கூட்டுறவு சங்கத்தில் திடீரென ஆய்வுப்பணிகளை மேற்கொண்டார்.
தொடர்ந்து வாழைத்தோட்டம் பகுதியிலும் ஆய்வு நடத்தப்பட்டது. பின்னர் அங்குள்ள மேல்நிலை பள்ளிக்கு சென்று மாணவர்கள், ஆசியர்களுடன் கலந்துரையாடினார். அப்போது அவருடன் கூடலூர் ஊராட்சி ஒன்றிய தலைவர் கீர்த்தனா, ஒன்றிய கவுன்சிலர் உத்தமன் மற்றும் கட்சி நிர்வாகிகள் உடன் இருந்தனர்.